2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய விஜயத்தின் முழுமையானத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவித்த பிரதமர்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியிருந்ததுடன், அது தொடர்பான முழுமையானத் தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்த தகவல்களையும் ஜனாதிபதியிடம் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான குறித்த சந்திப்பு இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .