2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’இந்தியக் குழந்தையை பாதுகாக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல ஒப்பந்தங்களை ஏமாற்றியதுபோல் சட்டப்படி, அரசமைப்பில் உள்வாங்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை இவ்வரசாங்கம் இல்லாதொழிக்க இந்தியா இடமளிக்கக்கூடாது என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகள் கோபால் பால்கேயுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் நேற்று (10) மாலை இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தையும் 13ஆவது திருத்தத்தையும் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் இல்லாமல் செய்யக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசமைப்பில் உத்தியோகபூர்வமான உள்வாங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை அப்படி இலகுவில் இல்லாதொழிக்க முடியாது. 13 என்பது இந்தியாவின் குழந்தை. அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது இந்தியாவில் பாரிய பொறுப்பு” என, தமிழ் முற்போக்குக் கூட்டணி மேலும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் தலைமையில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், கூட்டணியின் செயலாளர் சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X