2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள திட்டம்

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெற்று மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .