2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் குறித்து விசாரணை

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் மற்றும் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கையர்களின் பின்னணிக் குறித்து, இந்தியப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

விசேடமாக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்ற இலங்கையர்கள் குறித்து இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருவதாக, இந்தியாவின் என்.டீ.டி.வீ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பெங்களூர், காஷ்மீர், கேரளா ஆகிய பிரதேசங்களில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க கடந்த வாரம் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலை கருத்திற் கொண்டு, இந்தியாவின் பல மாநிலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .