Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 01 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல், இந்தியாவுக்குமான அச்சுறுத்தலாவே தான் கருதுவதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஆறுமுகம் தொண்டமான், இந்திய ஊடமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணலின்போதே, மேற்கண்டாவாறு கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமராக, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளமையானது, இந்தியாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் இவ்வாறு இந்தியாவில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும், இலங்கை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய அரசாங்கம் பலமடைந்தால், இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்வதால், இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினருக்கு உத்வேகம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையக பகுதிகளில் வீடமைப்பு திட்டம், வைத்தியசாலை ஆகியவை இந்திய நிதியுதவின் கீழ் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆகையால் மோடியின் வருகையை தாம் எப்போதும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்தே தாம் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago