2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’இனிமேலும் வன்முறை வேண்டாம்’ நீர்கொழும்பில் சுவரொட்டிகள்

Editorial   / 2019 மே 20 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

'இனிமேலும் வன்முறைகள் வேண்டாம்' என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள், நீர்கொழும்பின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து, நீர்கொழும்பு நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் பூர்த்தியானதை நினைவுக்கூர்ந்து, நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், நீர்கொழும்பு பிரதேச சர்வமத குழு ஆகியன,  மூன்று மொழிகளிலும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .