Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 10 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50பேர் தயாராகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
எனவே இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரிய, பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை என்பதுடன் மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கமும் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இருந்து இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் எண்ணிக்கையை வரையறுத்து குறிப்பிடவும் முடியாது.
சர்வதேச சக்திகளின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago