Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இறுதிவாக்கெடுப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள், தீர்மானங்களை ஏற்கெனவே எடுத்துள்ளமையால், பெரும் பரபரப்பு ஏதுவுமின்றி, வாக்கெடுப்பு இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.
எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிரணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளதாக அறியமுடிகின்றது.
வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அதற்கு, ஒன்றிணைந்த எதிரணி கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது.
இறுதி வாக்கெடுப்பில், தம்முடன் இணைந்து எதிர்த்து வாக்களிக்கவில்லை எனில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதியக் கூட்டணியை உருவாக்குவதற்கான, பேச்சுவார்த்தை தொடர்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லையென, ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு வாக்களிக்கப்பது என்பது தொடர்பில் தீர்மானத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தை, தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது. எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, இவ்விருவரும் இன்று (05) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
வரவு- செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பில், மார்ச் 12ஆம் திகதி இடம்பெற்றது. ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 79 வாக்குகளும் கிடைத்தன. திட்டத்துக்கு ஆதரவாக, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, மணியை சின்னமாகக் கொண்ட ஜே.வி.பியும். ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் (பஞ்சாயுதம்) வரவு- செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago