2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இராட்டினம் விபத்தில் எண்மர் காயம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- பலகொல்ல பண்டாரநாயக்க மகா வித்தியாயத்தின் மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட விழாவில், இராட்டினத்தினால் ஏற்பட்ட விபத்தில் எட்டுபேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அனைவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராட்டினம் மேலெழும்பியதும், வயதான பெண்ணொருவர் தன்னுடைய இருக்கையை மாற்றிக்கொள்வதற்கு முயன்றபோது இராட்டினத்தின் சமநிலை அற்றுபோனதனால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்த பொலிஸார், கண்டி பெரஹராவையொட்டி முன்னெடுக்கப்படும் இவ்வாறான களியாட்ட விழாக்களின் போது, மக்கள் மிக அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5