2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை

Freelancer   / 2021 ஜூலை 17 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரை நடைமுறையில் உள்ள சுகாதாரச் சட்டங்களை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வருபவர்களுக்கு நடத்தப்படும், முதல் பி.சி.ஆர் சோதனையில் கோவிட் நோயால் பாதிக்கப்படாவிட்டால், அவர்கள் ஏழு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .