2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இரண்டு சடலங்கள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரைகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவ பகுதியில் இன்று காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சடலம் அடையாளங்காண முடியாத வண்ணம் சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .