Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி - நுரைச்சோலை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரைகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவ பகுதியில் இன்று காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. ஆணொருவரின் சடலமே கரையொதுங்கியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலம் அடையாளங்காண முடியாத வண்ணம் சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆராச்சிகட்டு - முத்துபந்திய கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .