Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த கடும் மழை காரணாக, இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 496 குடும்பங்களைச் சேர்ந்த 1976 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கினிகத்ஹேன - கண்டி பிரதான பாதையின் ஒரு பகுதி, 10 கடைகளுடன் சரிந்து வீழ்ந்ததில் அக்கடையில் இருந்த வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், சூரியவெவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றின் மீது நேற்று மாலை மரமொன்று வீழ்ந்ததில் 31 வயதுடைய பெண் மற்றும் அவருடைய இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன், அக்கரபத்தனை, டொரின்டன் தோட்ட பகுதியில், வெள்ள நீரியில் அடித்துச் சென்ற இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர்.
மேலும், கண்டி - மஹியங்கனை பாதையில் ஒருதொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரம் வீழ்ந்ததில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பிரதேச செயலக பகுதிகளில் 331 குடும்பங்களைச் சேர்ந்த 1250 பேரும் நுவரெலிய மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேரும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago