2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தினர் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்  

அரசியல்வாதிகள் என்னதான் விமர்சித்தாலும் வடக்கிலுள்ள மக்கள் இன்று இராணுவத்தினர் மீது மிகவும் அன்பு வைத்துள்ளனர். முப்படையினர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாரிய உறுதுணையாயிருக்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கில் ஏற்பட்ட வௌ்ளத்தின்போது, மக்களை இராணுவம் காப்பாற்றியது.

அவ்வாறான, செயற்பாடுகளால், இராணுவத்தினர் மீது, அம்மக்கள் கௌரவமும் நம்பிக்கையும் நட்பும் வைத்துள்ளனர் என்றார்.   

புத்தளம், அருவக்காடு பிரதேசத்தில், வெளிநாட்டு கடன் உதவியுடன் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, குப்பை அகற்றும் போது, சட்ட ரீதியான பொறுப்பு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கே உண்டு என்றார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (4) இடம்பெற்ற பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்துரைத்த அவர், சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகம் உள்ளதாகவும் அதாவது இன்று நாடு எதிர்நோக்கியுள்ள குப்பைப் பிரச்சினை தொடர்பாக அனைவரும் அறிந்து கொண்ட விடயம் தான் கொலன்னாவை குப்பை மலை சரிவு தொடக்கம் அதற்காக அரசு என்ற ரீதியில் தாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுமாகும் எனவும் தெரிவித்தார்.  

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இன்று களுகங்கை, மொரஹாகந்த திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதைப் போன்று, உமாஓயா 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் உமாஓயாத் திட்டம் நிறைவடையும் என்றார்.  

இன்று, முப்படையினரும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாரிய உறுதுணையாயிருக்கின்றனர். இன்று அரசியல்வாதிகள் என்னதான் விமர்சித்தாலும் வடக்கிலுள்ள மக்கள் இராணுவத்தினர் மீது மிகவும் அன்பு வைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

அண்மையில், அங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அங்குள்ள மக்களை இராணுவம் காப்பாற்றிய போது, வடக்கு மக்கள் இராணுவத்தினர் மீது, கௌரவமும் நம்பிக்கையும் நட்பும் வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.  
தான் பொலிஸ் துறையைப் பொறுப்பேற்று 3 வருடங்களே ஆகியுள்ள நிலையில், நாடு பூராகவுமுள்ள 30 பொலிஸ் நிலையங்களில் ஒரு வாகனம் கூட இல்லையெனவும் கடந்த கால அரசாங்கம், அமைச்சர்களே, இதற்கான பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.  

பொலிஸ் சேவையில் 85,000 பேர் கடமையாற்றும் நிலையில், இதில் பொலிஸ் விசேட படையணியினரும் உள்ளடங்குவதுடன், இன்று பாதாளக் குழுவைப் பிடித்தல், போதைப் பொருள் கைப்பற்றல் என்ற செயற்பாடுகளில் இவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் இவர்கள் ஒவ்வொருவரின் சேவையையும் பாராட்ட, கௌரவப்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .