2024 மே 15, புதன்கிழமை

இலங்கையின் மிக உயரமான நபர்

Simrith   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இலங்கையின் மிக உயரமான நபராக அடையாளங் காணப்பட்டுள்ளார்.

பிபிசி சிங்கள சேவையின் படி, புதுக்குடியிருப்பு கைவேலியில் வசிக்கும், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்டவர்.

தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாக அவர் தெரிவிக்கிறார். இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை காணமுடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கசேந்திரன், பேருந்தில் இருக்கை கிடைக்காத வரையில் பயணிக்க முடியாது என்றும், நீண்ட தூர பேருந்தில் பயணித்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகிறார்.

முச்சக்கர வண்டி ஓட்டுநரான கசேந்திரன் தனது வாகனத்தை அவர் கழுத்தை வளைத்தே ஓட்ட வேண்டும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .