2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையில் மோசமடையும் காற்றின் தரம்

Freelancer   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை கடந்த காற்று இயக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுவாசப்பிரச்சினையை எதிர்கொள்வோர், உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில், அவசியம் ஏற்படுமாயின் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X