Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 17 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரின் பதவி விலகலை தவறாக எண்ணி, நாட்டில் பல்வேறு விமர்சனைங்களை முன்வைத்து, இனங்களிடையே விரிசலை ஏற்படுத்த சிலர் முயல்வார்களாயின், அச் செயற்பாடு தவிர்க்கப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களை, முஸ்லிம் எம்.பிக்கள் நேற்று (11) சந்தித்து, தாங்கள் இராஜினாமா செய்ததன் பின்புலம் பற்றி விளக்கமளித்தனர். அதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காகவும் நாட்டுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வகையிலேயுமே, தாம் ஒன்றிணைந்து அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானமே இதுவாகும் என எடுத்துரைத்துள்ளார். நாட்டில் முஸ்லிம் தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறையின் போது, மக்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்ற கோரிக்கை தாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்ததாகவும், பாதுகாப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்புடன் தாம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் பல பாகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளால் நாம் பதற்றமடைந்தோம் என தெரிவித்த அவர், நாம் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பு என்ற வகையில், இந்த முடிவுக்கு வந்ததாகவும் மாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.
திகன சம்பவத்துக்கு பின்னர் அவ்வாறான அசம்பாவிதம் மீண்டும் இடம்பெறாதவாறு மகாநாயக்கர்கள் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இதன்போது நினைவுக்கூர்ந்தார்.
நாட்டில் இனம்பெற்ற பிரச்சினைகளை சர்வதேசம் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது என்பதை தடுக்கும் வகையில் தாம், சர்வதேச பிரதானிகளிடம் இது குறித்து தெளிப்படுத்தியதாகவும், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவே, தங்கள் தரப்பினர் சில தியாகங்களை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்தின் மூலம் நடக்கவிருந்த அசம்பாவிதத்தை தடுக்க முயன்றதாகவும் அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு செவிமடுத்த மகாநாயக்கர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தவிர ஏனையோர் பதவிகளை ஏற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்போது கருத்துரைத்த ரிஷாட் பதியூதீன், “தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை” என தெரிவித்துள்ளார். எனினும், “அண்மைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடியும் வரையிலும் அமைச்சு மற்றும் இதர பொறுப்புக்களை ஏற்கமாட்டோம்” என முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதனால், விசாரணைகளை நிறைவடைந்து நியாயமான தீர்வொன்று கிடைக்கும் வரையிலும் எத்தகையை பதவிகளையும் ஏற்கமாட்டோம்” என முஸ்லிம் பிரதிநிதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதனிடையே, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துவரும் கருத்துகளுக்கு மாநாயக்கர்கள் தங்களது கடும் அதிருப்தியை இதன்போது வெளியிட்டனர். ஹிஸ்புல்லாஹ்வின், அக்கருத்தில் தங்களுக்கும் உடன்பாடில்லையென முஸ்லிம் அரசியல்வாதிகள், மகாநாயக்கர்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
“முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையாக இருந்தாலும், உலகளாவிய ரீதியில் அறுதிப்பெரும்பான்மையாக வாழ்க்கின்றனர்” என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago