2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2024 மார்ச் 18 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடி படகு ஒன்று கடத்தப்பட்டதை தொடர்ந்து, அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் நாயகம்  சுசந்த கஹவத்த இதனை தெரிவித்தார்.

ஈரானிய கப்பலுடன் குறித்த கடற்பரப்பிற்கு கடற்கொள்ளையர் குழுவொன்று வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .