2024 மே 02, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

Freelancer   / 2024 ஏப்ரல் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும்  கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .