2025 ஜூன் 25, புதன்கிழமை

’இலங்கைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான்’

Editorial   / 2019 ஜூன் 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில், ஈரான் உள்ளது என, இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் எண்ணிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என்றும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு, உள்ளூரிலுள்ள ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானிலுள்ள செல்வாக்கே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒரு மணி நேரம் கழித்து, தான் பதிவிட்டது தவறு எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தாக்குதல், வசாபி சன்னி பிரிவினரால் நடத்தப்பட்டதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள ஷியா கல்வி நிறுவனங்களுக்கு, ஈரானே நிதியுதவி வழங்கி வருவதாகவும் இதில் மதமாற்றம் இடம்பெறுவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு வாய்ப்புள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .