2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைப் பணியாளர்களின் பயன்கள் விரிவுப்படுத்தப்படவுள்ளன

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காகச்  செல்லும் இலங்கைப் பணியாளர்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக, வழங்கப்படும் பயன்களை விரிவாக்க அரச ஈட்டு, முதலீட்டு வங்கி, மத்திய வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முந்தைய கடன், சுயத்தொழில் கடன், வீடமைப்புக் கடன் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகளுடன் தற்போது முன்னெடுக்கப்படும் கடன் யோசனைத் திட்டத்திலுள்ள குறைபாடு, கடன் தொகையை அதிகரித்தல், பணியாளர்களின் முதலீட்டு வாய்ப்பை அதிகரித்தல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய வங்கியால் தற்போது வழங்கப்படும் 50,000 ரூபாய் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முந்தைய  கடனை 5 இலட்சமாக அதிகரிக்கவும் வீடமைப்பு கடனை 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் மத்திய வங்கி பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 செயலற்றுள்ள சுயத்தொழில் கடனை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்புக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றள்ளது.

இந்த விடயங்கள் குறித்து 2 வங்கி நிறுவனங்கள் சிறந்த பதிலை வழங்கியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில்  மிகவும் இலகுவான சட்டத்திட்டங்களின் கீழ் இந்த ​யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .