Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவு இந்திய- இலங்கை கடற்பரப்பில் தமது கண்காணிப்பு பணிகளை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கையின் கரையோர பாதுகாப்புக்காக விமான கண்காணிப்பு வசதிகள், தேவையான உபகரணங்களை வழங்க இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவு தயாராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்படையானது இலங்கையின் கடற்பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் கடற்படையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025