2025 ஜூன் 18, புதன்கிழமை

இலங்கையின் காய்கறி, பழவகைகள் ஓமானுக்குக் கொண்டு செல்லப்பட்டன

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய காய்கறி மற்றும் பழவகைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விசேட வேலைத்திட்டமானது, மத்தள விமானம் நிலையம் ஊடாக, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, தேசிய காய்கறி மற்றும் பழவகைகளை ஏற்றிய முதலாவது விமானம், இன்று (16) அதிகாலை மத்தள விமான நிலையத்திலிருந்து, ஓமானின் மஸ்கட் நோக்கி புறப்பட்டுள்ளதாக, மத்தள விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உபுல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 3,371 கிலோகிராம் காய்கறி மற்றும் பழவகைகளே இவ்வாறு ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஓமானுக்கு பயணித்த விமானமானது, நேற்று (15) இரவு, கட்டார் மற்றும் ஓமானில் தங்கியிருந்த 150 இலங்கையர்களுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த விமானமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .