2024 மே 06, திங்கட்கிழமை

இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது

Simrith   / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X