2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் கொலை; மூவர் காயம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹதபான்கொடையில், 28 வயதான இளைஞனொருவர் கூரிய ஆயுதத்தினாலும் கட்டையாலும் தாக்கப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 11.10க்கு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் உட்பட மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர், உடுமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்கென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைப் பொலிஸார் இனங்கண்டுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இங்கிரியப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X