2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள   சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனியவின் விளக்கமறியல், ஜூன் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட்ட அவரை புதன்கிழமை (11) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி பொது மன்னிப்பைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மற்ற கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X