2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் நெருக்கடியில்’

Editorial   / 2020 ஜூலை 19 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி குறித்து   அரசாங்கம் இதுவரை சரியான தீர்மானத்தை எடுக்காதுள்ளதால், மாணவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனரென, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர், பரீட்சை விடயத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக கால தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. இச்செயற்பாடானது, மாணவர்களுக்கு  இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது. என்று கூறிய அவர்,  உயர்தர மாணவர்கள் மிகவும் திட்டமிட்டு,  ஓர் இலக்கை நோக்கியே  பரீட்சையை எதிர்நோக்குவார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக பரீட்சையை பிற்போடுவதால், அவர்கள் பரீட்சைக்கு  தங்களை தயார்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .