2025 ஜூலை 12, சனிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் மறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில்    கைதான  12 பேரை,  எதிர்வரும் 27ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு,  கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு  கல்முனை நீதிமன்ற  நீதவான்  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று (13)   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த சந்தேக நபர்கள்  தொடர்பான  பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதே வேளை,  இன்று  பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக,   அனைத்து சந்தேக நபர்களினதும்    விளக்கமறியல் மீண்டும்   நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த  வழக்கு விசாரணை,   இம்மாதம் 27ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .