2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உரைப்பெயர்ப்பாளரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு

Editorial   / 2019 மே 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உரைப்பெயர்ப்பாளரை, 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) குறித்த சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜமால்டின் நௌஷாட் என்ற இந்நபர், 2006ஆம் ஆண்டிலிருந்து உரைப்பெயர்ப்பாளராக நாடாளுமன்றில் கடமையாற்றி வருவதாகவும், அத்துடன் நீண்ட காலத்துக்கு முன்னர் தேசிய​ தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவரும் இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .