2024 மே 04, சனிக்கிழமை

உலப்பன சுமங்கல தேரருக்கு விளக்கமறியல்

Editorial   / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி, தாபரே மாவத்தையில் உள்ள பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் நீதிமன்றில் முன்னிலையான கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அதிபருமான உலப்பனே சுமங்கல தேரர் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாத காரணத்தினால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவித்த நீதவான், சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .