Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் மோசடி, வீண்விரயம் மற்றும் களவுக்கு கிரீடம் அணிவித்தவர்கள் மீண்டும் இந்நாட்டில் ஆட்சிக்கு வர ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த அரசாங்கம் ஒன்பது கோடி இலட்சம் ரூபாய் கடன் சுமையுடன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் நாட்டை உண்மையாகவே கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்று (19) பிற்பகல் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய அரசாங்கத்தின் ஐந்து வருட பயணத்தின் முதலாவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிறைவேறாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவரேனும் முயற்சிப்பார்களேயானால் அந்த நோக்கத்தை ஒருபோதும் அவர்களால் அடைந்துகொள்ள முடியாது. பலமான, தேசப்பற்றுடைய, சிறந்த அரசியல் ஞானத்துடன் ஐக்கிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதாகவும் அதன் எதிர்கால பயணத்தை 2020ஆம் ஆண்டில் தீர்மானிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசப்பற்றுடையவர்கள் என கூச்சலிடும் அநேகமானவர்களை விட தாமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நாட்டை நேசிக்கிறோம். உலகின் எந்தவொரு நாட்டுக்கோ வேறு சக்திகளுக்கோ நாட்டை அடிமைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தி அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றபோது அவற்றை விமர்சித்து சிலர் முற்றிலும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அப்படியாயின் குறித்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுத் தீர்வுளை அரசாங்கத்திற்கு முன்வைக்குமாறு தாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கிலோ கிழக்கிலோ எந்தவொரு பிரஜையும் மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கான எவ்விதத் தேவையும் இல்லாத அரசியல் அடிப்படையுடன் பலமான நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்துவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, ஊழல் மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு தண்டனைகளை வழங்கி ஊழல் மோசடிகளையும் அநியாயங்களையும் ஒழித்து ஐக்கிய அரசாங்கம் தூய்மையானதொரு அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கத்தில் உள்ள எவரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக தெளிவான தகவல்கள் கிடைத்தால் அவர்களுக்கு கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களைப் பார்க்கிலும் கடுமையான தண்டனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago