2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’எஞ்சிய நிதியுதவியை வழங்கும் ஐ.எம்.எப்’

Freelancer   / 2024 மார்ச் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஞ்சிய நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது வெற்றி எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நாடு வளர்ச்சியை நோக்கிய நிலையான பாதையை அடைந்துள்ளதால், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்கால நிதியுதவியை விரைவில் வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X