2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எந்தத் தேர்தல் முதலில் நடக்கும்?பதிலளித்தார் ஜனாதிபதி

Simrith   / 2024 மார்ச் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா நடத்தப்படும் என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு நேற்று கூடிய அமைச்சரவைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .