2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘எனது கருத்துகளை எவருமே கவனத்திற்கொள்ளவில்லை’

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே கவனத்திற்கொள்ளவில்லை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை 90 சதவீதம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அண்மையில் பாதுகாப்பு செயலாளர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் தெரிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் இல்லாத ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவிப்பதன் மூலம் தீவிரவாத்தை இல்லாமல் செய்ய முடியாது என்றும், எனவே அரசியல்வாதிகளின் கருத்துகளை கேட்டு ஏமாறாமல் சுயபுத்தியுடன் செயற்பாடுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .