Editorial / 2026 மார்ச் 02 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

"ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரனில் விக்ரமசிங்க, ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பு மல் பார வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்."
7 minute ago
20 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
25 minute ago
1 hours ago