2025 ஜூன் 12, வியாழக்கிழமை

எரிபொருள் தீர்ந்ததால் உரிமையாளரின் வீட்டுக்கு தீ

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்கள், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடைய வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

இப்பலோகம - ரணஜயபுர, திலகபுர பகுதியில் உள்ள வீட்டுக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று, எரிபொருளை பெறுவதற்கு குறித்த இடத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது, இவர்களில் சிலருக்கே எரிபொருள் கிடைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் உரிமையாளரின் வீட்டைத் தீக்கிரையாக்கியுள்ளனர்.

வீடு தீப்பிடிக்கும் போது உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

அயலவர்கள், கிராம மக்கள் மற்றும் இப்பலோகம பொலிஸார் இணைந்து தீயை அணைத்து மக்களை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த இரு பாடசாலை மாணவர்களில் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13