2025 ஜூன் 12, வியாழக்கிழமை

எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் போக்குவரத்துக்கு உடனடியாக புதிய விநியோகஸ்தர்களை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடமைக்கு சமுகமளிக்காத விநியோகஸ்தர்களின் அனுமதியை இரத்து செய்யுமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரயில்கள், அரசுக்கு சொந்தமான பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பௌசர்கள் மூலம் சேவைகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான 84 பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான 103 பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத 194 வாடகை பௌசர்கள் உட்பட 981 பௌசர்கள் மூலம் இன்று பிற்பகல் 4 மணிக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

தேவைக்கேற்ற ஓட்டோ டீசல், சுப்பர் டீசல், 92 ரக பெற்றொல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 95 ரக பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13