Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 01 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சேவைக்கு வராத பௌசர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதுடன், சேவைக்கு வரும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிநுத்தத்தையத்து, எரிபொருள் போக்குவரத்துக்காக வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிராமப்புற டிப்போக்களுக்கு ரயில் எரிபொருள் போக்குவரத்தின் திறனை 40% முதல் 100% வரை அதிகரிப்பது. இது போக்குவரத்துச் செலவை வெகுவாகக் குறைக்கும். இதுவும் நிரந்தர தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன போக்குவரத்து விலையில் இதுவரை பதிவு செய்யப்படாத புதிய வாகனங்களுக்கு அனுதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் 24 மணி நேரமும் பணியாளர்களை நியமித்து அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான காலத்தைக் குறைத்து ஒரு வாரத்துக்குள் புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்களுக்கு தனியான பெற்றோல் விநியோக முனையங்களை ஒதுக்கி அவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல்.
நாளாந்தம் இயங்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான பவுசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்வரும் தனியார் வாகனங்களுக்கான நிலையான விலை சூத்திரத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வது மற்றும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குதல் ஆகிய விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
7 hours ago