2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த வாக்களிப்பு நடவடிக்கை, இன்று மாலை 4 மணி வரை நடைபெறவுள்து.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், இம்முறை 53, 384 பேர் தகுதி, வாக்களிப்புத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வாக்களிப்புக்கு பின்னரான தேர்தல் முடிவின் பின்னர், சபைக்காக, 28 அங்கத்தர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும் விகிதாசார வாக்களிப்புக்கு அமைய 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளுக்காக, 800 பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .