2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’எவருக்கும் தொடர்பில்லை’

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகுண்டுத் தாக்குதலுக்கும் அசாத்சாலிக்கும், முஜிபுர் ரஹ்மானுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் குறித்து தான் வேதனையடைவதாகவும் வெட்கித்தலைகுனிவதாகவும் கூறினார்.

சிலர் விருது வழங்கும் நிழற்படங்களைக் காண்பித்து குற்றஞ்சுமத்துவதாகசட சுட்டிக்காட்டிய அவர், விருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என்று கூற முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையை மாற்றியமைப்பதற்கு, பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான அதிகபட்ச ஒத்துழைப்பை, தானும் தனது சகோதரர்களும் தனது சமூகத்தினரும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், தன்னுடைய இணைப்புச் செயலாளராக, இப்ராஹிம் எப்போதும் செயற்பட்டதில்லை என்றும் அடையாள அட்டை எதனையும் அவருக்கு வழங்கவில்லை என்றும் இதன்போது கூறினார்.

விசாரணைகள் நிறைவடையும் வரை குற்றவாளிகள் என எவரையும் சுட்டிக்காட்ட வேண்டாம் என்று அரசியல்வாதிகளிடம் தாம் கோருவதாகவும் அவர் கேட்டக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .