Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 24 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 க்கு மேற்பட்டோரை படுகொலைச் செய்து, 500 இற்கு மேற்பட்டோரை காயமடையச் செய்த ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று (24) ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
பெரியமுல்லையில் அமைந்துள்ள, பெரிய பள்ளிவாசலின் முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜும்மா மஸ்தித் வீதி வழியாக நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள யூஸுபியா பள்ளிவாசல் வரை பேரணியாக வந்து, பிரதான வீதியோரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்கள் பதாதைகளையும் , ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், தேசிய தௌஹீத் ஜமாஅத்தினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு எதிராகவும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகைத் தந்த முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளால், நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 110 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 200 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago