Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட 38 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமையால் தம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மனு இன்று (02) பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கட்சி உறுப்புரிமையை நீக்கும் செயற்பாட்டை தடுத்து, அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
அத்துடன், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கி, உள்ளூராட்சி மன்றங்களின் பதவியிலிருந்து நீக்குதல் தொடர்பில் வர்தமானியில் அறிவிப்பதை நிறுத்துமாறு உத்தரவிடுமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.
எதிர்வரும் 09 ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago