2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவினரை இழுத்தெடுக்க யானை கட்சிக்குள் மந்திராலோசனை

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை, மீண்டும் ஐ.தே.கவுக்குள் இழுத்தெடுத்துக் கொள்வதற்காக, மிகவும் இரகசியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில், எதிரணிகளில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஏற்கெனவே கட்சியிலிருந்து விலகிசென்று, செயற்பாட்டு அரசியலில் ஈடுபடாமலிருக்கும் ஐ.தே.க உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்ளும் வகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி ஆலோசனையின் பேரிலேயே, இவ்வாறு மந்திராலோசனை செய்யப்படுவதாக அறியக்கிடைக்கிறது.

அதனோர் அங்கமாக, நிதி மற்றும் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டும் இழுத்தெடுபதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருதாக அறியமுடிகின்றது.

கட்சியின் உப-தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, பாலித ரங்கேபண்டார மற்றும் ருவன் விஜயவர்தன ஆகியோரடங்கிய குழுவினரே, ஐ.தே.கவிலிருந்து விலகிச் சென்றவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் முதற்கட்டமாக ஈடுபட்டுள்ளனரென அறியமுடிகின்றது. அதன் பின்னரே, அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை இழுத்தெடுத்தல் அல்லது போட்டியிலிருந்து வாபஸ் பெறவைத்தல் ஆகியன முதற்கட்டமாக இடம்பெறுகின்றன.

அதன்பின்னர், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் இழுத்தெடுத்துக் கொள்ளல், இரண்டாவது கட்டமாக நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.க குழுவினருடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒன்றிணைந்துச் செயற்படுதல் தொடர்பில் ஓரளவுக்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனரென அறியமுடிகின்து.
மிக முக்கியமாக, ஐக்கிய மக்கள் சக்தியில், மாவட்ட ரீதியில் போட்டியிடுகின்ற தலைமை வேட்பாளர்களைக் குறி வைத்தே, ஐக்கிய தேசியக் கட்சியினரால் இந்தக் காய்நகர்த்தல் முன்னெடுக்கப்படுகின்றதென அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .