Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியைப் பிளவுபடுத்திவிட்டுச் சென்றவர்கள் உருவாக்கியுள்ள சக்திக்கு, இப்போது ஆபத்து ஆரம்பமாகி உள்ளதெனத் தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகலவிராஜ் காரியவசம், ஐ.தே.கவை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவதற்கான கதவு திறந்திருக்கிறதன்றும் கூறினார்.
பொல்கஹாவெல பிரதேசத்தில், தேர்தல் அலுவலகமொன்றை நேற்று (10) திறந்துவைத்து உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தவர்கள், தற்போது அதை விட்டு படிப்படியாக விலகத் தொடங்கியுள்ளனர் என்றும் ஐ.தே.கவுக்கு எதிராகப் புறப்பட்டவர்களுக்கு, ஒருபோதும் நல்லது நடந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், தன்விளக்கம் அளித்துவிட்டு, மீண்டும் கட்சியில் இணைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் கூறிய பொதுச் செயலாளர், யார் சென்றாலும், கட்சி அழியப்போவதில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
54 minute ago