2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.நா அமைதிப்படையில் இணையும் இலங்கைப் பொலிஸ்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை இராணுவத்துடன் இணைந்து கடமையாற்ற, இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் 69 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசேட நேர்முகப் பரீட்சையின் பின்னரே குறித்த 69 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதென்றும், இந்த 69 பேரில் கொலிஸ் கான்ஸ்டபிள் தொடக்கம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் வரை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தமது கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களது பின்னணி குறித்த அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .