2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சக்தி இன்று முடிவு

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில், எதிரணியின் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தனது தீர்மானத்தை இன்று (07) அறிவிக்கவுள்ளது.

எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (07) நடைபெறும். அதன்பின்னரே, எதிர்க்கட்சியின் நிலைப்பாடு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

அரசமைப்பு பேரவையின் அதிகாரத்தில் இருந்த கணிசமான அளவு நாடாளுமன்ற அதிகாரம், ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் கொண்டுவரும் வகையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவென குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

20ஆவது திருத்தத்துக்கு எதிராக, எந்தவொரு தரப்பினருடனும் நிபந்தனைகள் இன்றி, செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .