2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐபோன்களுடன் கைதானவர்கள் CIDயிடம் ஒப்படைப்பு

Editorial   / 2019 ஜூன் 08 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு  - ஏத்துகால பகுதியில், 402 ஐபோன்கள் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (08), குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

செயற்பாட்டில் இருந்த 402 ஐபோன்கள், 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள், 60 ரவூட்டர்கள், மேலும் சில பொருட்களுடன், குறித்த சந்தேக நபர்கள், நேற்று (07) கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மூவருள், சீனப்பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார்.

அவர்கள், தொடர்பாடல் செயன்முறையில் குறிப்பாக சர்வதேச அழைப்புகளை மேற்கொண்டபோது மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .