2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐரோப்பா வெள்ளங்கள்: 120 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 16 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஐரோப்பாவில் மோசமான வெள்ளங்களில் குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளதுடன், 1,300 பேரைக் காணவில்லை.

கடும் மழை வீழ்ச்சியையடுத்து ஆற்றுப் படுக்கைகளை ஆறுகள் உடைப்பெடுத்துள்ளன.

ஜேர்மனியில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பெல்ஜிய ஊடகங்கள் 22 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதை விட நெதர்லாந்து, லக்ஸம்பேர்க், சுவிற்ஸர்லாந்து ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஜேர்மனி மாவட்டம் ஒன்றிலேயே 1,300 பேர் காணாமல் போயுள்ளனர்.

தவிர, ஜேர்மனியிலுள்ள கிராமமொன்று முற்றாக அழிவடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .