2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 மே 07 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. டீ.கே.ஜீ.கபில

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, இலங்கைப் பிரஜை ஒருவர் நேற்று  (06) இரவு, விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து வருகைத்தந்த, வத்தளை-மஹாபொல பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய மொஹமட் அசாம் மொஹமட் அக்ரம் என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, 2 கிலோ கிராம் 901 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர், தனது  பயணப் பொதியில் மிகவும் சூட்டுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .