2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ் ரக போதைப்பொருளுடன் தாய், மகள் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் ரக போதைப்பொருளுடன் தாய் மற்றும் மகள் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சென்று திரும்பிய இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, 2 கிலோ 500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

68 வயதுடைய தாய் மற்றும் 36 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X