Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 1 கோடி 50 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கின்ற போது இம்முறை அவ்வருமானம் இழக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, “இவ்வருடம் யாழ். மாநகர சபை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகை சலுகையாக சபை அனுமதியோடு விலக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது
அதேவேளை, இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவ காலத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
நல்லூர் ஆலய உற்சவத்தின் போது வழமையாக, யாழ்ப்பாண மாநகர சபைக்கு 1கோடி 50 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கின்ற போது, சபை ரீதியான செயற்பாடுகளுக்காக சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவது வழமை
எனினும் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில் அனைத்து செலவுகளையும் சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது
ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக குறைந்தளவாகவே சபைக்கு கிடைத்துள்ளது
இவ்வாண்டு பெரும் நிதிநெருக்கடியினை எமது மாநகரசபைக்கு ஏற்படுத்தியுள்ளது இதன் தாக்கம் எதிர்வரும் வரவு - செலவுத்திட்டத்தில் தான் வெளிப்படும்
இது தொடர்பில் மாநகர சபை முதல்வர் ஏனைய தரப்பினருடனும் ஆராய்ந்து ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவுள்ளோம்.
அத்தோடு மேலதிகமாக ஏதாவது நிதி மூலங்களைதேடுவதா அல்லது நிலையான சேமிப்பில் இருக்கிற பணத்தை எடுத்து செலவழிப்பதா எவ்வாறு இந்த நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் நாம் விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வுள்ளோம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .